Tuesday, 28 January 2025

இலவசம்.

இலவசம்!

எலக்சன் வந்தால் காசு 

மீண்டும்  எலக்சன் வந்தால் காசு கிடைக்கும்
இலவசம் என்றால் சோறு கிடைக்கும்.
ஒருநாள் பொழுதில் முடிஞ்சி போச்சா?
மறுநாள் பொழுது விடிஞ்சு ஆச்சா?

அடிமை வாழ்வின் விடுதலை வேண்டி
மடிந்தவர் கோடி உறவுகள் தாண்டி.
விண்ணில் மின்னும் மீன்கள் சொல்லும்
மண்ணில் என்றும் தியாகங்கள் வெல்லும்.


உரிமையை விற்பது கேவலமாகும்.
கடமையை மறப்பதும் பாவமாகும்.
மானம் உயிரென வாழும் மனிதரை
வாழும் சாமியாய் வணங்கி வாழ்வோமே!

வளர்ந்த பாரதம் வாழ்கவே!
புலர்ந்த மாரதம் வாழ்கவே!


கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment