Monday, 15 December 2025

படிக்கப் படிக்க

கூடக் கூடத்தான் கூட்டல்.

படிக்கப் படிக்கத் தானே நல்லாப்
பாடம் விளங்குது.
பாடப் பாடத் தானே பாட்டும்
இனிமை யாகுது.

செதுக்கச் செதுக்கத் தானே சிலையும்
சிற்ப மாகுது.
வடிக்க வடிக்கத் தானே கவிதை
வண்ணம் மிளிருது

பார்க்கப் பார்க்கத் தானே அழகு
இரசனை ஆகுது.
கோரக்க கோர்க்கத் தானே மாலை
கூடிச் சொலிக்குது.

வார்க்க வார்க்கத் தானே எதுவும்
வடிவம் வளருது.
சேர்க்க சேர்க்கத் தானே செல்வம்
வளமை கூடுது.

ஊட ஊடத் தானே காதல்
தேட்டங் கொள்ளுது
கூடக் கூடத் தானே இன்பம்é
கூட்ட லாகுது.

பழகப் பழகத் தானே நெஞ்சம்
ஆழம் புரியுது.
விலக விலகத் தானே காதல்
வலிமை தெரியுது.

தேடத் தேடத் தானே உறவு
திரண்டு வருகுது.
நாட நாடத் தானே காதல்
கனிந்து மணக்குது.

மணக்க மணக்கத் தானே மனது
மயக்கம் அடையுது.
மயங்க மயங்கத் தானே காதல்
மனதில் இனிக்குது.

கொ.பெ.பி.அய்யா.





Monday, 3 November 2025

மதங்களை மறந்து விடு.

எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..


எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..



எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..

கொ.பெ.பி.அய்யா





Tuesday, 28 January 2025

இலவசம்.

இலவசம்!

எலக்சன் வந்தால் காசு 

மீண்டும்  எலக்சன் வந்தால் காசு கிடைக்கும்
இலவசம் என்றால் சோறு கிடைக்கும்.
ஒருநாள் பொழுதில் முடிஞ்சி போச்சா?
மறுநாள் பொழுது விடிஞ்சு ஆச்சா?

அடிமை வாழ்வின் விடுதலை வேண்டி
மடிந்தவர் கோடி உறவுகள் தாண்டி.
விண்ணில் மின்னும் மீன்கள் சொல்லும்
மண்ணில் என்றும் தியாகங்கள் வெல்லும்.


உரிமையை விற்பது கேவலமாகும்.
கடமையை மறப்பதும் பாவமாகும்.
மானம் உயிரென வாழும் மனிதரை
வாழும் சாமியாய் வணங்கி வாழ்வோமே!

வளர்ந்த பாரதம் வாழ்கவே!
புலர்ந்த மாரதம் வாழ்கவே!


கொ.பெ.பி.அய்யா.