Monday, 17 February 2014

கைபேசி

கைபேசி ஜாக்கிரதை !


பெண்கேட்டு வந்தானென்று
எண்ணையுந் தந்துவிட்டாள்.
பின்விசாரணை செய்வதற்குள்
பெண்ணானாள் அவன்வசமே...

கைபேசி பொல்லாதது.
கண்ணினை மறைத்தது.
பொய்யினைப் பேசிப்பேசி
புத்தியைக் கெடுத்தது.

எத்தனையோ திருமணங்கள்
இப்படித்தான் செய்தானென
இப்போது தெரிந்தபின்
உப்புநீர் ஒழுகவிட்டாள்.


கவிஞர்.கொ.பெ.பிச்சையா..

No comments:

Post a Comment