Sunday, 16 February 2014

சின்னப் பயலே நின்னு கேளடா!

கவனம் பழகு!

உணர்வுகள் புரியும் நேரத்தில்
உறவுகள் பிரிவது சாபமே!
கனவுகள் விளங்கும் உச்சத்தில்
நினைவுகள் விழிப்பது இலாபமே!

விழிகள் இணையும் விளக்கத்தில்
வினைகள் விளைவது கலக்கமே!
நெருக்கம் அணையும் பழக்கத்தில்
இணக்கம் தொலைவது வழக்கமே!

கூடும் யோகத் தருணத்தில்
கொட்டிப் போவது நட்டமே!
தேடும் மனங்கள் உருக்கத்தில்
திரிந்தால் கெடுமே திட்டமே!

வயலை எட்டும் நேரத்தில்
வாய்க்கால் உடைவது துயரமே!
வசந்தம் தொடங்கும் காலத்தில்
வறுமை அடைவது சோகமே!

தூதுகள் விளங்கும் சமயத்தில்
தோதுகள் முறிவது மோசமே!
காதல் துலங்கும் இதயத்தில்
கருத்து விரிவதும் நாசமே!

மௌனம் செய்யும் தாமதமே!
மாறும் நிலைமை ஆபத்தே!
கவனம் பழகும் அவசியமே!
கணக்கும் தீரும் நேரத்தே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment