Monday, 17 February 2014

கல்லும் கலைவடிவாகும்

பொன்னாகப் பேணி எல்லாம்.

நொடிகளெல்லாம் படிகள்
பழகி ஏறினால் பாதகமில்லை.
கடிதெனத் தயங்கினால்
காலம் உனக்கில்லை.

கல்லும் கலைவடிவாகும்.--அது
செதுக்கப் படும்போது..
சொல்லும் இலக்கியமாகும்--அது
விதைக்கப் படும்போது.

எண்ணம் துணையாகும்--ஊன்றி
எழுந்திடும் போது.
மண்ணும் பொன்னாகும்--அது
பண்படும் போது.

உன்னால் முடியும்--உன்னை 
நம்பிப் பேணி யெல்லாம்
இந்நாளே தொடர்கவே --உன்
பின்னால் உலகமே.

வேராய் ஊன்றியிரு--வாழ்வின்
பேராய் விளைந்திடும் போது.
உலகே அழுதிடும்--உன்னை
இழந்திடும்போது

கவிஞர்.கொ.பெ.பிச்சையா. 

No comments:

Post a Comment